Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3159
உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்

உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த

திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை

இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்

பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பிரசாத மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.