Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3164
உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி

உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்ப
மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை

மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்

அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்

கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.