Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3986
உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும் 

ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய் 
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும் 

வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த 
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின் 

வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம் 
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே
பாடல் எண் :4880
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ 

துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய 
வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று 

வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும் 
கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஸோதிப் பெருமான் 

குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய் 
நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல் 

நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.