Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3083
உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்

உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே

நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே

என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட

அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.