ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்