Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3567
ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்

ஊர்தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து

தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்

வஞ்சமே பொருளென மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.