கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக் கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின் பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும் உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம் சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே