தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான சபையிலே தனிநடம் புரியும் தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும் வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன் நல்அருட் சோதிதந் தருளே