Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :282
தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து தலிகின்ற செய்கை நலமோ
பாடல் எண் :3607
தேனே திருச்சிற் றம்பலத்தில் 

தெள்ளா ரமுதே சிவஞான 
வானே ஞான சித்தசிகா 

மணியே என்கண் மணியேஎன் 
ஊனே புகுந்தென் உளங்கலந்த 

உடையாய் அடியேன் உவந்திடநீ 
தானே மகிழ்ந்து தந்தாய்இத் 

தருணம் கைம்மா றறியேனே
பாடல் எண் :4866
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் 
ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் 
வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல் 
லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே
பாடல் எண் :5483
தேனே கன்னல் செழும்பாகே 

என்ன மிகவும் தித்தித்தென் 
ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் 

துயிரில் கலந்த ஒருபொருளை 
வானே நிறைந்த பெருங்கருணை 

வாழ்வை மணிமன் றுடையானை 
நானே பாடிக் களிக்கின்றேன் 

நாட்டார் வாழ்த்த நானிலத்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.