பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே புத்தமு தேமறைப் பொருளே வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே தீங்கொடி யாத வினையனேன் எனினும் செல்வநின் கோயில்வந் தடைந்தால் ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி ஏன்எனா திருப்பதும் இயல்போ