Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :654
பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
புத்தமு தேமறைப் பொருளே
வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
தீங்கொடி யாத வினையனேன் எனினும்
செல்வநின் கோயில்வந் தடைந்தால்
ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
ஏன்எனா திருப்பதும் இயல்போ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.