பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச் செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய் மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே