Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :661
பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
புண்ணியம் விளைகின்ற புலமே
மதுவினின் றோங்கும் பொழில்தரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
பூங்குழற் கன்புபூண் டவன்காண்
எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
இருப்பதுன் திருவருட் கியல்போ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.