பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே மதுவினின் றோங்கும் பொழில்தரு முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது பூங்குழற் கன்புபூண் டவன்காண் எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல் இருப்பதுன் திருவருட் கியல்போ