மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன் மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன் விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன் வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன் புண்ணாளா நின்றமன முடையேன் செய்த பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக் கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக் கைவிடில்என் செய்வேனே கடைய னேனே