மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன் புண்ணியா நின்அருளை இன்னும் காணேன் பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே எண்ணினால் அளப்பரிய பெரிய மோன இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும் தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே