மோக மதியால் வெல்லும்ஐம் புலனாம் முட வேடரை முதலற எறிந்து வாகை ஈகுவன் வருதியென் னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து பாற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச் சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே