Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :254
வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
நாயி னேன்உனை நாடுவு தென்றுகாண்
கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
தணிகை மாமலைச் சற்குரு நாதனே
பாடல் எண் :338
வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கணையேன்
மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
கஞ்சன் மால்புகழ் கருணைஅங் கடலே
கண்கள் முன்றுடைக் கரும்பொளிர் முத்தே
அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
அண்ண லேதணி காசலத் தரசே
பாடல் எண் :600
வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே

திருச்சிற்றம்பலம்

 சிறு விண்ணப்பம் 
பொது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் :961
வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ
பாடல் எண் :1040
வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே 

வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே 
நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான் 

நானும் அங்கதை நயப்பது நன்றோ 
தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான் 

தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே 
எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே
பாடல் எண் :1135
வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து 

வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி 
விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல் 

விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே 
தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில் 

சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ 
செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான் 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே
பாடல் எண் :2654
வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
தஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.