வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன் பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்