வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும் தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத் தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய் ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன் என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே