Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4761
அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி 

அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே 
முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே 

முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே 
சகவடிவில் தானாகி நானாகி நானும் 

தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே 
சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே 

சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.