அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து மிக்கோல மிடவும்அவர்க் கருளாமல் இருளால் மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து இக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன் எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் தக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே