அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான் இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும் இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ