அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர் பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர் பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர் பின்படு தீமையின் முன்படு கின்றீர் இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே