Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3699
அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே 

அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே 
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே 

சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே 
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே 

விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய் 
தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.