Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4192
அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே 

அன்பினால் அணைத்தருள் என்றாள் 
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம் 

படமுடி யாதெனக் கென்றாள் 
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது 

திருவுளம் அறியுமே என்றாள் 
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.