அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன் கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன் கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக் கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய் செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே