அடுக்கியபேர் அண்டம்எலாம் அணுக்கள்என விரித்த அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே நடுக்கியஎன் அச்சம்எலாம் தவிர்த்தருளி அழியா ஞானஅமு தளித்துலகில் நாட்டியபேர் அறிவே இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக் கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே