Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3944
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங் 

காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத் 
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத் 

தன்னருளும் தன்பொருளும் தானே என்பால் 
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும் 

குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை 
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே 

ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.