அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால் மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன் எந்தோஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன் எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே