Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5673
அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த 

அய்யர் அமுதர்என் அன்பர் அழகர் 
நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு 

நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது 
பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே 

பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள் 
இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.