அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே