Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4216
அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்தேன் 

அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி 
என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள் 

துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள் 
நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார் 

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.