அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன் முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன் முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித் தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான் தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே