Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3070
அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்

அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த

மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ

தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்

என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.