அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன் என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ