அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத் துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே