Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3788
அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே 

அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான் 
கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற தரசே 

கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம் 
பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில் 

புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ 
இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின் 

றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே   
  கலக்குகின்ற - ச மு க பதிப்பு 
 மிசையின் - ச மு க பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.