அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய் இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய் நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே