அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய் அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க் கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர் எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே