Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4200
அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான் 

அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள் 
இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த 

ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும் 
எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல் 

இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே 
சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.