Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5361
அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும் 

அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண் 
டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை 

ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன் 
மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே 

மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர் 
செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய் 

திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.