அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர் ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும் பரந்த நீரிடை நின்றழு வானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன் கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே