அரிதாகி அரியதினும் அரிய தாகி அநாதியாய் ஆதியாய் அருள தாகிப் பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப் பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக் கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத் தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச் செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே