அரியது நினது திருஅருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும் பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம் கூட்டிச் சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப் பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே