அருகா மலத்தில் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால் உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன் பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே முருகா முகம்மு விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ