அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந் திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே