Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4029
அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும் 

ஆனந்தத் தனிமலர் என்கோ 
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ 

கடையனேன் உடையநெஞ் சகமாம் 
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி 

இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ 
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ 

சோதியுட் சோதிநின் றனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.