Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3099
அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்

அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்

சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே

மகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய்
இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்

எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.