Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3954
அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை 

அருட்பெருஞ் ஸோதியை அரசை 
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை 

வள்ளலை மாணிக்க மணியைப் 
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த 

புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத் 
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான 

தீபத்தைக் கண்டுகொண் டேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.