Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :632
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
வானமும் தேடினும் இன்றே
இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
இணைதுணை எனநினைந் துற்றேன்
மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
வாழிய அருட்பெருந் துறையே

திருச்சிற்றம்பலம்

 அபராதத் தாற்றாமை 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.