அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின் அருளர செனஅறிந் தனன்பின் உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய் வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி வழிகின்ற தென்வசங் கடந்தே இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை ஈந்தருள் இற்றைஇப் போதே